states

img

ஜார்கண்ட்: பேருந்தும் டேங்கர் லாரியும் மோதி விபத்து - 16 பேர் பலி

ஜார்கண்ட்டில் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் கோவிந்த்பூர்-சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் பாதர்கோலா கிராமத்தின் அருகில் இன்று காலையில் 40 பயணிகளுடன் சென்ற  பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.